பாடசாலை மாணவி மாயம் : தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு தாய் கோரிக்கை!!

884

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவியொருவர் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த மனோகரன் யதுர்னா எனும் 17 வயது மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குறித்த மாணவி கடந்த 10/08/2024 ம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லைனெ தாய் தெரிவித்துள்ளார்.

எனவே காணாமல்போயுள்ள மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொலைபேசி இலக்கத்திறக்கு 0775994497 அறிவிக்குமாறு தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.