வவுனியா ஓமந்தையில் மாவட்ட விளையாட்டு வளாக உள்ளக அரங்கு மற்றும் நீச்சல் தடாகம் திறந்துவைப்பு!!

1923

வவுனியா – ஓமந்தையில் மாவட்ட விளையாட்டு வளாக உள்ளக அரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பன இன்று (18.10) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, ஓமந்தை பகுதியில் மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது சான்றிதழ் உடனான உயிர் காப்பு மற்றும் நீச்சல் பயிற்சி வகுப்புகள், கடினப்பந்து பயிற்சி வகுப்புகள் என்பன இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வவுனியாவில் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கு இது தனித்துவமான வாய்ப்பாக அமைய உள்ளமை சிறப்பம்சமாகும்.

இதன்போது விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.