யூரோபார்முலா கார் ஓட்ட பந்தயத்தில் பங்குபற்றிய முதல் இலங்கையர்!!

447

இத்தாலியில் நடைபெற்று வரும் யூரோ ஃபார்முலா ஓபன் கார் பந்தய தொடரின் 8ஆவது கட்டத்தில் இலங்கை கார் பந்தய சாம்பியன் யெவன் டேவிட் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இந்த முக்கிய F3 மோட்டார் பந்தய நிகழ்வில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது.

யூரோ ஃபார்முலா ஓபன் கார் பந்தயத் தொடரின் 8ஆவது கட்டமாக இத்தாலியின் மொன்சா பாதையில் நடைபெற்ற பந்தயத்தில் யோவான் கலந்துகொண்டார்.

தனது அறிமுகப் போட்டியில் அனுபவம் வாய்ந்த போட்டியாளர்களுடன் ஓட்ட பாதையில் நுழைந்த 17 வயதான அவர், போட்டியின் தொடக்கத்திலிருந்தே அனைவரும் பாராட்டும் அளவுக்கு செயற்பட்டுள்ளார்.

யூரோ ஃபார்முலா ஓபன் கார் பந்தயத்தின் 8ஆவது கட்டத்தில் மோன்சாவில் நடந்த 16 சுற்றுகள் பந்தயத்தை 30 நிமிடங்கள் 13 வினாடிகளில் முடித்த யோவான் டேவிட் வெற்றியினை தழுவிக் கொண்டுள்ளார்.

இந்த வெற்றியானது, இலங்கை மோட்டார் பந்தய வரலாற்றில் ஒரு தடகள வீரர் பெற்ற அதிகூடிய வெற்றிகளில் ஒன்றாகும்.