யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் திடீரென உயிரிழந்த சம்வம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
ஜனநாயக தேசிய கூட்டணியில் இம்முறை போட்டியிடும் இளம் வேட்பாளரும் முன்னைநாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான செந்திவேல் தமிழினியன் வயது 33 என்பவரே திடீரென உயிரிழந்துள்ளார் .
நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பேதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை (23) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.