சமூக ஊடகங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

328

நாட்டில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக பகிரப்படும் போலி செய்திகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வங்கிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உள்ளிட்ட நம்பகமான நிறுவனங்களின் பெயரில், தனிநபர்களின் தனிப்பட்ட மற்றும் நிதியியல் தகவல்களை மோசடியாகப் பெறுவதற்கு போலியான செய்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்திகள் இணைய குற்றத்தில் ஈடுபடுவர்களால் சமூக ஊடக தளங்கள், போலி இணையத்தளங்கள், குறுஞ்செய்திகள் ஊடாக அனுப்பப்பட்டமை குறித்து அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு கூறுகிறது.



எனவே, இது போன்ற செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, பொதுமக்களை கோரியுள்ளது.