காலநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

545

நாட்டின் பல இடங்களில் இன்று (01.11.2024) மாலை அல்லது இரவு வேளைகளில் கடும் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறு மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மின்னல் மற்றும் மழையுடனான காலநிலை நிலவக் கூடும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையினால் அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது.