திடீரென தீ பற்றி எரிந்த சொகுசுக் கார்!!

558

கொழும்பு – பத்தரமுல்லையிலிருந்து கொஸ்வத்த நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து பத்தரமுல்லை நகரத்தில் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது. எனினும் தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.