தமிழர் பகுதியில் வேருடன் சாய்ந்த மரம் : வாகனம் சேதம்!!

929

நட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தர்மபுரம் சுண்டிக்குளம் பகுதியில் மரம் ஒன்று வேருடன் சாய்தத்தில் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.

பரந்தன்- முல்லைத்தீவு A-35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மரம் வேருடன் சாய்ந்தது.

இதில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது மின் இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது போக்குவரத்து பொலிஸார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து மரத்தை அகற்றி நிலைமையை வழமைக்கு கொண்டுவந்தனர்.