வவுனியாவில் யானை தாக்கியதில் ஒருவர் பலி!!!

1588

வவுனியா வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி நபர் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகரான மோகனகாந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று(10) மாலை வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது வீதிக்கு வந்த யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளார்.

குறித்த யானை சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் நின்று அட்டகாசம் புரிந்துள்ளதால் அந்த வீதி வழியாக மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.