மட்டக்களப்பில் கரையொதுங்கிய மர்மப் படகு!!

473

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மர்ம படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு ப்டகே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த படகு கடலில் மிதந்து வந்து கரை தட்டியதை அடுத்து அதனை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அது தொடர்பிலான விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.