வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி ஆலயத்தின் வரலாற்று சிறப்பினை கூறும் பழனி முருகன் என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆலய முன்றலில் விழா இடம்பெற்றது. சிவஸ்ரீ சிவசங்க குருக்கள் நூலினை வெளியிட்டு வைக்க வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார்.
ஆசிகுளம் கிராம அலுவலகர் எஸ்.ராம்பிரசாத் சிறப்புப் பிரதியை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் சிறப்புரையாற்றினார்.