இலங்கை கடலில் கிடைத்த 11 கிலோ தங்கம்!!

772

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தங்கத்துடன் பத்தலங்குண்டுவைக்கு அண்மித்த கடலில் வைத்து மூன்று சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 11 கிலோ 300 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.