தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செயிண்ட்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரின் பெற்றோர் பழனிவேல், சந்தேக மரணம் என விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தினர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாகரத்தையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா,
முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ், மூவரும் நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தையின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குழந்தையின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் அப்பகுதி மக்கள் போராட்டம் செய்து வந்தனர். இதனையடுத்து இன்று பள்ளிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.