கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை : கணவன் தலைமறைவு!!

457

மாத்தறை பிரதேசத்தில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த கொலை சம்பவம் நேற்று (06) பிற்பகல் , திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிந்திகேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் , நில்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான கணவன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் சம்பவம் மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.