அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் விரைவில் முக்கிய முடிவு!!

430

அர்ச்சுனாவின் (R.Archchuna) நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.


இன்று(07.01) நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் குழுவொன்று அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை வெளியிடவுள்ளது.

குறித்த அறிக்கையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத்தில் அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.