இலங்கை நடிகரும் யூடியூபருமான சுதத்த திலக்சிறிக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சுதத்த திலக்சிறி நடத்தும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பகிரப்பட்ட கருத்துக்கள் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் இருந்ததாக கூறியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் மனுச நாணயக்கார சார்பில் சட்டத்தரணிகளால், குறித்த நடிகருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.