வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் அடிகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!!

383

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் அடி காயங்களுடன் இன்று (04.08) திங்கள் கிழமை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வேலை செய்து வந்த குறித்த இளைஞர் நேற்று இரவு மது அருந்திவிட்டு வைரவபுளியங்குளம் பகுதியில் முன்னர் வாகனம் பழுதுபார்க்கும் இடமாக இயங்கி வந்த இடத்தில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதன் பின்னர் தான் வசித்து வந்த வீட்டின் கூரையின் மேற் பகுதியில் உறங்கியிருந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது தலையிலும், மார்புப் பகுதிகளில் அடிகாயங்கள் காணப்படுவதுடன் வாயிலும் மூக்கிலும் இரத்தம் கசிந்த நிலையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வத்தளையைச் சேர்ந்த எஸ்.சரவணன் என்கின்ற 28 வயது இளைஞன் என தெரியவருகிறது. இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

40 41