சங்கக்கார, ஜெயவர்தனவை கட்டுப்படுத்த புதிய திட்டத்துடன் பாகிஸ்தான் அணி!!

244

SL

இலங்கை அணியுடன் மோதவுள்ள பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்க சங்கக்கார, ஜெயவர்தனவை விரைவில் ஆட்டமிழக்கச் செய்வதே சிறந்த வழி என்று பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் 6ம் திகதி தொடங்குகிறது.

இது குறித்து பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் கூறுகையில், இலங்கை அணியுடன் நடக்க உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அனுப வீரர்கள் ஜெயவர்தன மற்றும் சங்கக்காரவின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதனை எங்கள் அணி பந்துவீச்சாளர்களிடம் வலியுறுத்தி உள்ளேன் என்று கூறியுள்ளார்.