
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில் வீதியைவிட்டு விலகிய வான் மின்சாரத் தூணுடன் மோதியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து நேற்றையதினம்(26.01.2025) இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, மின்சார தூண் உடைந்து வீழ்ந்ததுடன் வான் பலத்த சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





