வவுனியாவில் மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாபமாக மரணம்!!

2229

வவுனியா -புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (07.02.2025) இடம்பெற்றுள்ளது. புளியங்குளம், பழையவாடி பகுதியை சேர்ந்த 6 வயதுடைய ந.மதுசாளினி என்ற சிறுமியே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.



வீட்டார் குறித்த சிறுமியை மட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதும் சிறுமி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.