கடவத்தை கணேமுல்ல அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நேற்று (14.02) இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த நபர் எரிந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.