யாழில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி!!

765

14 வயது மாணவி ஒருவர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது செட்டியார்மடம் பகுதியில் இன்று(14.02.2025) இடம்பெற்றுள்ளது. இந்த குற்றச்செயலுடன் சந்தேகநபரான 21 வயதுடைய இளைஞர் தலைமறைவாகியுள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.