வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!!

361

kundu Kundu1

வவுனியா, இறம்பைக்குளம், ராணி மில் வீதியில் கைக்குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா குளமானது அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றது. புனரமைப்பு வேலைகளுக்காக பெக்கோ இயந்திரத்தால் குளக்கரையின் பற்றைகளை அகற்றிய போது அதனுள் கைக்குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.

அதனையடுத்து பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு குளத்தில் வேலை செய்தவர்களால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவ்விடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைக்குண்டை மீட்டு அதனை செயலிழக்கச் செய்தனர்.