முருங்கை பூ சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

292

பொதுவாக நாம் முருங்கைக்காய், முருங்கை இலை (முருங்கைக்கீரை) போன்ற முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை சாப்பிடுவோம் சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் முருங்கைப் பூக்களையும் சாப்பிடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?


முருங்கைப் பூக்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மை கிடைக்கிறது என நாம் இங்கு பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்


பொதுவாக குளிர்காலம் முடியும் போதும், வசந்த காலத்தின் வருகையின் போதும் காலநிலை மாற்றத்தால் பல நோய்கள் ஏற்படலாம்.

எனவே தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் ஒரு கப் முருங்கைப் பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வரலாம். இந்த பானம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கணிசமாக உதவும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்

அதே போல உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் தற்போது ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தப்பட்சம் ஒருவராவது பாதிக்கப்பட்டிருக்கும் சூழல் உள்ளது.

எனவே இந்த பிரச்சனையை கட்டுக்குள் வைத்திருக்க, ஊட்டச்சத்து நிபுணர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள பரிந்துரைக்கின்றனர். முருங்கை பூக்களில் சிறந்த அளவு பொட்டாசியம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே முருங்கை பூ தேநீரை தினமும் குடிப்பதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், மேலும் இதனால் இதய நோய் அபாயமும் குறையும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் முருங்கை பூக்கள் உதவுகின்றன.

முருங்கை பூக்களை காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த பூ உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.