காட்டு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை!!

609

பொலன்னறுவை, நிக்கபிட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த சம்பவம் நேற்று (27) காலை இடம்பெற்றுள்ளதுடன், எலஹர, நிக்கபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆசிரியை ஒருவரே இதன் போது உயிரிழந்துள்ளார்.



உயிரிழந்த ஆசிரியை உணவு தயாரிப்பதற்குப் பாத்திரங்களைக் கழுவுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, படுகாயமடைந்த ஆசிரியை பக்கமுன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.