மஹியங்கனை – ஹெட்டிபொல பிரதான வீதியில் வில்கமுவ சந்தியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை (27) பிற்பகல் இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.