அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் இடையில் 52.5 தூணுக்கு அருகில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் எல்பிட்டிய, எல்ல வீதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் என்பதுடன், உயிரிழந்த மாணவன் சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
குறித்த மாணவன் தனது கைடயக்க தொலைபேசியின் handsfree அணிந்தவாறு ரயில் தண்டவாளத்தில் தனியாகப் பயணித்ததாகவும் ரயிலில் ஒலி எழுப்பியும் சத்தம் கேட்கவில்லை என்றும் இதனால் பின்னால் வந்த ரயிலில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.