கெக்கிராவ பிரதேசத்தில் காட்டு யானையொன்று இரவு நேரங்களில் குடுயிருப்புகளின் கதவுகளைத் தட்டி அசாதாரணமான நடத்தையை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கதவுகளை திறக்கவில்லை எனில், யானை ஆக்ரோஷமாக செயற்பட்டு கதவுகளை உடைப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கெக்கிராவ, சாஸ்திரவெல்லிய பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சமீபத்தில் குறித்த யானை அப்பகுதி வீடொன்றின் கதவை தட்டியபோது, வீட்டில் உள்ளவர்கள் அறை ஒன்றில் பதுங்கியுள்ளனர்.
யானை, சிறிதுநேரம் விடாப்பிடியாக வீட்டு கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால், கோபத்தில் கதவை உடைத்துள்ளது. இதன்பின்னர், கதவின் திறப்பு பகுதியை எடுத்துக்கொண்டு கலாவெவ தேசிய பூங்காவை நோக்கி தப்பிச் சென்றுள்ளது.
கதவை சேதப்படுத்தியதோடு, அருகில் இருந்த வாழைத் தோட்டத்தையும் யானை நாசம் செய்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.