மரணத்தில் இளம் தாயின் செயல் – உயிர் வாழும் இரு பெண்கள்!!

315

தென்னிலங்கையில் மூளைச்சாவடைந்த பெண்ணால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக உறுப்புக்கள் பொருத்தப்பட்டு, அவர்கள் உயிர்வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இரண்டு சிறுநீரகங்களும் வேறு இரண்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



திஸ்ஸமஹாராம பகுதியை சேர்ந்த 41 வயதான டோனா இக்னேசியா என்ற தாய் மூளைச்சாவடைந்து உயிரிழந்தார்.

கடந்த மாதம் 18 ஆம் திகதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மயக்கமடைந்து, கிரிந்த மருத்துவமனைக்கும், அங்கிருந்து டெபரவெவ அடிப்படை மருத்துவமனைக்கும், பின்னர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.

அவருடைய மூளை ஏற்கனவே இறக்கத் தொடங்கியிருப்பதாகவும், அதனால் அவருடைய உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு வழங்கி காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் அவருடைய குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

அதற்கு பெண்ணின் கணவரான ஷாலுக நிஷான் இணக்கம் தெரிவித்திருந்தார். மூளைச் சாவு ஏற்பட்ட அவரது இரண்டு சிறுநீரகங்களையும் அகற்றிய மருத்துவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்கும் போராடும் இருவருக்கு மாற்றியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையின் மயக்க மருந்து நிபுணர் ஹிருஷக டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ், சிறப்பு மருத்துவர் சமிந்த கோட்டகே உள்ளிட்ட அறுவை சிகிச்சை குழு இந்த அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.