சட்டவிரோத மின்வேலியில் சிக்கி தாயும் ஐந்து வயது குழந்தையும் பரிதாபமாக பலி!!

303

அம்பாந்தோட்டை சூரியவெவ வீரியகம பகுதியில் வசித்து வந்த ஒரு தாயும் அவரது ஐந்து வயது குழந்தையும் மாலை அண்டை வீட்டில் போடப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இறந்த குழந்தை தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு சிறு குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது,

சட்டவிரோத மின் கம்பியில் சிக்கிக் கொண்டதாகவும், தனது மகனைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு ஓடிய தாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



மின்சாரம் தாக்கி தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் 38 வயது தாயும் அவரது 5 வயது மகனும் ஆவர். குறித்து சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.