இலங்கை கடற்படையின் ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (Princely Liyanage) என்பவர், நடைப்பயிற்சி இயந்திரத்தில் (manual treadmill) 12 மணி நேரம் மற்றும் 24 மணி நேரத்தில் வேகமாக ஓடி இரண்டு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்த சாதனை முயற்சி மார்ச் 8 ஆம் திகதி அதிகாலை 1500 மணிக்கு கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலகே திசாநாயக்க உள்ளரங்கில் ஆரம்பித்தது.
இதன்போது, அவர் சவாலை வெற்றிகரமாக முடித்து, இரண்டு சாதனைகளையும் நிகழ்த்தினார். இலங்கை கடற்படை அவரது சாதனையை அங்கீகரித்துள்ள நிலையில், அவரது சகிப்புத்தன்மை மற்றும் உறுதியை மெச்சியுள்ளது.