அவுஸ்திரேலியாவில் இலங்கையரின் வாகனத்தில் மோதுண்டு பெண் பலி!!

416

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விக்டோரியாவின் கிப்ஸ்லேண்ட் பகுதியில் தவறான பாதையில் பயணித்ததாகக் கூறப்படும் கார் மோதியதில் ஒரு பெண் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:45 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இலங்கையர் கைது

68 வயதான பெண், நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​இலங்கையரின் வாகனத்தில் மோதுண்டு காயமடைந்துள்ளார்.  ஆபத்தான நிலையில் மெல்போர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய சம்பத் ஜயசுந்தர என்ற இலங்கையர் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார். எனினும் குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.