வவுனியா கிடாச்சூரி அ.த க பாடசாலையில் முதல் மாணவன் நினைவாக மணிக்கோபுரம் திறப்பு!!

692

வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலைக்கு பாடசாலையின் முதல் மாணவன் அமரர். திரு அப்பாப்பிள்ளை அரியரத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக குடும்பத்தினரால் அமைக்கபெற்ற மணிக்கோபுரம் 25-02-2025 அன்று  பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.


மேற்படி நிகழ்வில்  பாடசாலையின்  முதல்வர் திரு.பா.கேமலதன் அவர்களின் அழைப்பின் பேரில்  வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர்   திரு. து. லெனின் அறிவழகன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு நா.கமலதாசன், வவுனியா பிரதேச செயலாளர் திரு இ.பிரதாபன் ,கிடாச்சூரி கிராம  அபிவிருத்தி சங்க தலைவர்  திரு. ஆ. அருந்தவநாதன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு தே. யாகீசஸ்வரன்  ஆகியோர் முன்னிலையில்  வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவில்  ஆலய தர்மகர்த்தா  சிவத்திரு.ஆறுமுகம்  நவரட்ணராசா அவர்களால் முதலாவது மணி ஒலிக்கப்பெற்று   பாடசாலைச் சமூகத்திடம் வைபவரீதியாக கையளிக்கப்பட்டது.