வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வரலக்ஷ்மி விரத விஞ்ஞாபனம் நாளை (08.08) அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
காலை 9 மணிக்கு விசேட அபிசேக பூசையும், காலை 10.30 மணிக்கு வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து மகாலக்ஷ்மி பூசை நடைபெற்று பக்தர்கள் பங்குபெறும் வரலக்ஷ்மி விரத பூசையுடன் திருவீதியுலா நடைபெறும்.
இவ் விசேட நிகழ்வுகளில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.