ஆபிரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ளது உயிர்கொல்லியான எபோலா. இந்த வைரசின் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் ஆகிய நாடுகளை சேர்ந்த 932 பேர் பலியாகிவிட்டனர்.
மிகவேகமாக பரவி வரும் எபோலாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இச்சூழலில் எபோலா வைரஸால் உயிர் இழந்தவர்களின் சடலங்களை வீதிகளில் தூக்கி வீசும் அவலநிலையும் நீடித்து வருகிறது.






