காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் யுவதி பரிதாபமாக உயிரிழப்பு!!

737

களுத்துறை, பனாபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மதில் இடிந்து விழுந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வாதுவை, மொரொன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தன்று, இந்த யுவதி தனது காதலனின் பாட்டியிடம் நலம் விசாரிப்பதற்காக பனாபிட்டிய பிரதேசத்தில் உள்ள காதலனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்போது வீட்டின் மதில் யுவதியின் மேல் இடிந்து விழுந்துள்ளது.

படுகாயமடைந்த யுவதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனமே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.