நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

539

கண்டி – அக்குரணை பிரதேசத்தில் இடம்பெற்ற நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 01.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி, வேன் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் மோட்டார் சைக்கிள்களின் செலுத்துனர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.