உச்ச நடிகரின் படத்திற்கு இணையாக ஒரு இயக்குனரின் படத்தை எதிர்பார்ப்பது ஷங்கர் படம் தான். இவர் இயக்கத்தில் பிரம்மாண்டனாக உருவாகி வரும் ஐ எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஷங்கரும் அந்த முயற்சியில் தான் தீவிரமாக உள்ளார். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஒஸ்கர் பிலிம்ஸ் இது பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆங்கில படத்தையெல்லாம் வாங்கி ரிலிஸ் செய்துக்கொண்டு வருகிறார்.
இதைக்கண்ட ஷங்கர் கோபத்துடன் அவரை அனுக, படத்தை எப்போது ரிலிஸ் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று கூறி அனுப்பிவிட்டாராம்.