மட்டக்களப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : இளம் குடும்பஸ்தர் பலி!!

1070

மட்டக்களப்பு – சந்திவெளி பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று  வெள்ளிக்கிழமை (18.04.2025) இடம்பெற்றுள்ளது. விபத்தில் சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவர் காயமடைந்துள்ளனர். மேலும், விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் சந்திவெளி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.