வவுனியாவில் பெருந்திரளான குருதி கொடையாளர்களுடன் நடைபெற்ற இரத்ததான முகாம்!(படங்கள்)

365

வவுனியா மாவட்ட இரத்த வங்கியில் இரத்த தட்டுப்பாட்டின் நிமிர்த்தம் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும் திரி சாரணர் குழுவும் இணைந்து நடாத்திய தமது 7 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (09.08) சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை வவுனியா தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியாலயத்தில் ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் தலைவரும், திரி சாரண, ஊடக மற்றும் பொதுத் தொடர்புகளுக்கான சாரண உதவி மாவட்ட ஆணையாளர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

வவுனியாவில் இரத்த தட்டுப்பாடு நிலவிய வேளையில், இவ் நிகழ்வில் 82 குருதி கொடையாளர்கள் இரத்ததானம் வழங்கி உன்னதமான சேவையினை புரிந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், இவ் நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களான ஸ்ரீ.கேசவன், த.நிகேதன், வ.பிரதீபன்,எஸ்.பிரதாபன் ஆகியோருக்கு எமது மனமார்ந்த பாரட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ் நிகழ்வில் சாரண உதவி மாவட்ட ஆணையாளர்களான திரு பொன்னையா, திரு கு.கமலகுமார், திருமதி நடேசமூர்த்தி, ஓய்வு பெற்ற தொழில் திணைக்கள உதவி ஆணையாளரும் சமாதான நீதவானுமாகிய திரு சோ.நகுலேஸ்வரம்பிள்ளை, தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியாலய உப அதிபர் திருமதி விலாசினி, சாரண ஆசிரியர் திருமதி ஜெயந்தி கணேசமூர்த்தி, ஆசிரியர் திருமதி சியாமா, சாரண தலைவர் சதீஸ், பாடசாலையின் சாரணர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், இராணுவத்தினர் என பெருந்திரளானோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர்.

11 12 13 14 15 16