அஜ்மல் பந்து வீச்சில் சந்தேகம் : போட்டி நடுவர் ஐசிசியிடம் புகார்!!

388


Ajmal

பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், சந்தேகத்திற்கிடமான முறையில் பந்து வீசுவதாக ஐசிசியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவரது பந்து வீச்சு மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.



இதனையடுத்து ஐசிசி விதிமுறைகளின் படி அவர் 21 நாட்களுக்குள் பரிசோதனைக் கூடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து பந்து வீசலாம் என்று ஐசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் இருந்த ஆட்ட அதிகாரிகள் அஜ்மல் வீசிய பல பந்துகள் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என்று கூறியுள்ளனர்.



இந்த புகார் அறிக்கையை பாகிஸ்தான் அணி மேலாளர் மொயின் கானுக்கும் அனுப்பியுள்ளனர். இது அஜ்மல் மீதான இரண்டாவது புகாராகும். முன்னதாக 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது துஸ்ரா பந்து வீச்சு மீது புகார் எழுப்பப்பட்டு பின்பு அவரது பந்து வீச்சு முறையாக இருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது.