இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.
அந்த வகையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 39வது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியா பொதுவைத்தியசாலை இரத்த வங்கியில் இன்றைய தினம்(05) இரத்ததானம் இடம்பெற்றது.
உதிரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் சிறீ தமிழ் ஈழ விடுதலை (சிறீ ரெலோ) இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 15க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.