தகராறில் விபரீதம் : இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு தந்தை கொலை!!

262

மாத்தளை, கலேவெல, மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மகன் தனது தந்தையை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் இன்று இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. மகுலுகஸ்வெவ, 04ஆவது மைல்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுயைட தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 32 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகுலுகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.