கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவியின் பெற்றோர், கடந்த ஞாயிற்றுக்கிழமை(04.05.2025) லங்காசிறி ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தனர்.
இதனையடுத்து, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜூக்கு எமது ஊடகத்திலிருந்து மாணவி விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவரும் அதற்கு உரிய நடவடிக்கையை கல்வி அமைச்சின் மூலம் எடுப்போம் என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தை விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.