மாவனல்லை – ரம்புக்கனை பகுதியில், பட்டவல மகா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது, உழவு இயந்திரத்தில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்திசையில் பயணித்த வாகனங்களின் ஒளி காரணமாக, டிப்பர் வாகனத்தின் சாரதி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை சரியாக கவனிக்காததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.