திருமணமாகி இரு மாதங்களில் பெண் விபரீத முடிவு : தமிழர் பகுதியில் சோகம்!!

1695

 

மட்டக்களப்பு காக்காச்சிவட்டை தாமரை கேணியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் விபரீத முடிவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் இப் பெண் நேற்று உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.