தங்காலை – அம்பாந்தோட்டை பிரதான வீதியில் ரன்ன வாடிகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (08) காலை 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாத்தறையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.