சொந்தமாக தீவு ஒன்றை வாங்கிய இலங்கை நடிகை : யார் தெரியுமா?

36

இலங்கை நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பாலிவுட் துறையில் உள்ளார்.

ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகளுக்குக் கூட இல்லாத ஒரு இடத்தை ஜாக்குலின் சொந்தமாக வைத்திருக்கிறார். அதாவது இலங்கையின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவை பாலிவுட் பிரபல நடிகை வாங்கியுள்ளார்.

நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கடந்த 2012 ஆம் ஆண்டு சுமார் 3.5 கோடிக்கு ரூபாய் மதிப்பில் வாங்கியதாக கூறப்படுகிறது.



இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் குமார் சங்கக்காரவின் தனியார் தீவுக்கு அருகில் இந்தத் தீவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தீவு ஆடம்பர ரியல் எஸ்டேட்டுகளுக்கான ஒரு முக்கியமான இடமாக மாறியுள்ளது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்த தீவை வாங்கி அதில் வில்லா கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் இந்த தீவை ஒரு தனியார் இல்லமாகப் பயன்படுத்துகிறாரா அல்லது வணிக நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடுகிறாரா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

2006 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இலங்கை பட்டத்தை வென்றவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான அலாடின் என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

அதேவேளை சொந்தமாக ஒரு தீவை வைத்திருக்கும் ஒரே பாலிவுட் நடிகை என்றால் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் 2012 ஆம் ஆண்டில், இந்த தீவை வாங்க சுமார் ரூ.3 கோடி செலவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.