8 வயது சிறுமியை கடத்த முயன்ற நபர் பொலிஸார் முன்னெடுத்துள்ள நடவடிக்கை!!

121

கடந்த 2 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஒரு பிரதான பெண்கள் பாடசாலைக்கு முன்னால் 8 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் மீது கார் மோதிய சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலன்னாவ வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் கடந்த 2 ஆம் திகதி குருந்துவத்தை, மல்பர பகுதியில் ஒரு காரில் அத்துமீறி நுழைந்து ஒரு சிறுமியைக் கடத்த முயன்றதாக தெரிவிப்படுகிறது.



இது தொடர்பாக கிடைத்த முறைபாட்டின் பேரில் குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.