வவுனியா இராசேந்திரகுளத்தில் இளம் பெண் சடலமாக மீட்பு!!

3578

வவுனியா இராசேந்திரகுளம் கிராமத்தில் நேற்றிரவு இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நீண்ட நேரமாக அவரது வீட்டு அறையில் அமைதியாக இருந்தமையினையடுத்து வீட்டார் அறையின் கதவினை திறந்து பார்த்த சமயத்தில் வீட்டின் கூறையின் மேற்பகுதியில் துணியின் மூலம் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 24 வயதுடைய தவகுலசிங்கம் திவ்யா ஆவார். சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.